உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Published On 2022-02-01 14:59 IST   |   Update On 2022-02-01 14:59:00 IST
வேலூர், திருவண்ணாமலை, ஆம்பூர் பகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
வேலூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் 7-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

வேலூர் மாநகராட்சியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி 18-வது வார்டு லட்சுமி 20-வது வார்டு டாக்டர்ஐஸ்வர்யா, 21 வது வார்டு பவானி, 26-வது வார்டு முரளி, 33-வது வார்டு திலீப்குமார், 47-வது வார்டு சிவகுமார், 48-வது வார்டு சாந்தி நாராயணன், 49-வது வார்டு விஜயகுமார் 51 வது வார்டு ரம்யா, 52-வது பிரவீன் சந்தோஷ் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை நகராட்சி 18-வது வார்டு பந்தள ராஜ் குமார், 21-வது வார்டு ராஜேஷ் குமார் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்பூர் நகராட்சியில் 2-வது வார்டு மக்கள் நீதி மையம் கட்சியின் வேட்பாளராக சுகுணா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News