உள்ளூர் செய்திகள்
பீரோ உடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை, ரூ.7.50 லட்சம் கொள்ளை

Published On 2022-02-01 12:47 IST   |   Update On 2022-02-01 12:47:00 IST
வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை, ரூ.7.50 லட்சம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோட்டில் உள்ள டால்பின்  நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் குமரன் (வயது 49). இவர் பெரம்பலூர் காய்கறி மார்க் கெட்டில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். வார நாட்களில் கிராமங்க ளில் நடக்கும் சந்தைகளிலும், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல் மாலை சந்தை வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். இவரது மனைவி பேபி (38) என்பவரும்   பெரம்பலூரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில், இவர் நேற்று அன்னை நகரில் உள்ள பக்கத்து கடைக்காரர் இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

குமரனும்  இரவு  துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இன்று  காலை  வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் பிரோவில் வைக்கப்பட்டிருந்த கை செயின், ஆரம், நெக்லஸ், மூக்குத்தி, தோடு, தாலிக்கொடி, டாலர் என 35 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம்  பணமும் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது  குறித்து  காய்கறி வியாபாரி குமரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு  செய்த  பெரம்பலூர் போலீசார்  மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

அதேபோல் டால்பின் நகரில் வாடகை  வீட்டில் வருபவர் செல்வராஜ் (40), இவரது சொந்த ஊரான கை. களத்தூரில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி காரியானூரில்  செவிலியராக பணி பணிபுரிந்து வருகிறார்.

பள்ளி விடுமுறைக்காக சொந்த ஊரான கைகளத்தூருக்கு சென்று விட்டு, இன்று காலை பள்ளிகள் திறப்பதால்,  பெரம்பலூர் வீட்டிற்கு  இன்று  காலை குழந்தைகளுடன் வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைத்து கிடப்பதும், வீட் டினுள்  இருந்து  சுமார் இரண்டே முக்கால் பவுன் மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயி ரம்  திருடு  போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து குமரன் மற்றும் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், பெரம்ப லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 தொடர் கொள்ளை சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News