உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கோடியக்கரை சரணாலயத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பறவைகள் வருகை

Published On 2022-01-31 15:15 IST   |   Update On 2022-01-31 15:15:00 IST
கோடியக்கரை சரணாலய பகுதியில் 247 வகையான 2 லட்சத்து 87 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் 
சரணாலயம் அமைந்துள்ளது. 

இங்கு ரஷ்யா, சைபீரியா, கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும், 
இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் 
ஆண்டு தோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு ஏராளமான பறவைகள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் இங்கு 
உணவுக்காக வந்து தங்கி செல்வது வழக்கம்.

இந்த ஆண்டும் கடற்காகம், கடல் ஆலா, செங்கால் நாரை, கூழை கிடா, கொக்கு, உள்ளான் வகைகள் உட்பட 247 வகையான பறவைகள் 
வந்துள்ளது. 

இதனை கணக்கெடுக்கும் பணி ஆண்டு தோறும் நடைபெறும். 
இந்த ஆண்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு கணக்கெடுத்து வந்தனர்.

கணக்கெடுப்பு பணி முடிந்தவுடன் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சத்தீஷ் கணக்கெடுப்பு விவரங்களை தெரிவித்தார்.

அதன் படி தற்சமயம் 67 வகையான பறவைகள் என மொத்தம் 
2 லட்சத்து 87 ஆயிரம் இருப்பதாக அறிவித்தார். அப்போது 
கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் உட்பட 
வனத்துறையினர் இருந்தனர்.

Similar News