உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

சகோதரர்களிடையே இடப்பிரச்சினையால் மோதல்

Published On 2022-01-30 14:36 IST   |   Update On 2022-01-30 14:36:00 IST
திருவாரூர் அருகே இடப்பிரச்சினையால் சகோதரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே மேல எருக்காட்டூரைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 65). இவர் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் அன்பழகன் (61). 

இருவரும் எருக்காட்டூரில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்குள் இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அசோகன் தனக்கு சொந்தமான இடத்தில் இரும்பு முள்வேலி வைத்துள்ளார். அதனை அன்பழகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு வந்து சேதப்படுத்தியுள்ளார். 

இதில் இரு தரப்புக்கும் தகராறு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அசோகன் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார். அதுபோல் அன்பழகனும் புகார் அளித்துள்ளார்.

அவர்களது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோகன் கொடுத்த புகாரின் பேரில் அன்பழகன் உள்ளிட்ட 12 பேர் மீதும், அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் அசோகன் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

அசோகன் புகாரின் பேரில் அன்பழகன் (61), வீரக்குமார் (52), ராஜசேகர் (56), ராபர்ட் (26), முருகுபாண்டி (22), கண்ணப்பன் (35), ராமன் (22), ஐயப்பன் (41) முனியாண்டி (76), குணா (48) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

மேலும் ராகுல்காந்தி, பசுபதி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். அன்பழகன் புகாரின் பேரில் அசோகன் (65), ரமேஷ் (50) ஆகிய இருவரை கைது செய்தனர். முருகேசன், ராஜா, ரேணுகாதேவி, ஹேமா, சுதர்சன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

Similar News