உள்ளூர் செய்திகள்
சுரங்கபாதை அமைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் சுரங்கபாதை அமைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை புதிய அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வழியில் செண்பகராயநல்லூர் சனிசந்தை - மருதூர் இணைப்பு சாலையில் சுரங்க பாதை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அந்த பாதை வழியாக தான் செல்லவேண்டியுள்ளது. மேலும் இறந்தவர்களின்
உடலை அவ்வழியாக தான் மயானத்திற்கு எடுத்து செல்லவேண்டியுள்ளது.
எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பாதையில் சுரங்கபாதை அமைத்து தரவேண்டும் என அப் பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பரிந்துரை செய்தும் இதுவரை சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.
இதனை கண்டித்து கரியாப்பட்டினம் ரயில் நிலையம் அருகே செல்வராஜ் எம்.பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தராஜ், காங்கிரஸ் கருணாநிதி, பஞ். தலைவர் கல்யாணி, முன்னாள் தலைவர் ராஜசிம்மன், மாவட்ட கவுன்சிலர் சோழன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.