உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கிணற்றுக்குள் பிணமாக கிடந்த வாலிபர்

Published On 2022-01-30 07:48 GMT   |   Update On 2022-01-30 07:48 GMT
நீண்ட போராட்டத்துக்குப்பிறகு 34 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உடுமலை:

உடுமலை நகரின் அருகே  தாண்டா கவுண்டர் தோட்டம் உள்ளது. இந்தகுடியிருப்பு பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் வாலிபர் தவறி விழுந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார்-தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் பிணமாக மிதந்தார். இதையடுத்து நீண்ட போராட்டத்துக்குப்பிறகு 34 வயது மதிக்கத்தக்க  வாலிபரின் உடலை   தீயணைப்பு துறையினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலைஅரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News