உள்ளூர் செய்திகள்
உடுமலையில் இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பூரணச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மடத்துக்குளம்:
திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து இளைஞர் முன்னணி சார்பாக உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பாக அரியலூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதிகேட்டு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.பூரணச்சந்திரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ், உதயகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் வீரப்பன், பப்பீஸ், சதீஷ்குமார். மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.