உள்ளூர் செய்திகள்
கைது

தர்மபுரியில் லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்ற 2 பேர் கைது

Published On 2022-01-29 13:14 GMT   |   Update On 2022-01-29 13:14 GMT
தர்மபுரியில் லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரி பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவருடைய உத்தரவுப்படி தர்மபுரி டவுன் பகுதியில் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்ற பன்னீர்செல்வம் (வயது 63), சேகர்(50) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 800 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் போலீசார், கைது செய்தனர். இதில் தொடர்புடைய தமிழ்ச்செல்வன்(45) என்பவரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News