உள்ளூர் செய்திகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
மூங்கில்துறைப்பட்டு அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி கவிதா(வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கி செல்லலாம் என்று கூறினார். ஆனால் இதற்கு பிரபாகரன் மறுத்ததால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கவிதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கவிதாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி கவிதா(வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கி செல்லலாம் என்று கூறினார். ஆனால் இதற்கு பிரபாகரன் மறுத்ததால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கவிதா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கவிதாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.