உள்ளூர் செய்திகள்
ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.

பா.ஜனதா சீட்டு கேட்டு வரவில்லை-ஓ.எஸ்.மணியன்

Published On 2022-01-28 14:25 IST   |   Update On 2022-01-28 14:25:00 IST
நாகை நகராட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சீட்டு கேட்கவில்லை என்று ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான 
ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார்.

நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த அ.தி.மு.க. வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். 

நேர்காணலுக்கு பின்பு ஓ.எஸ் மணியன் எம்.எல்.ஏ. கூறுகையில்:-

நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு வார்டுகளில் கூட போட்டியிடுவதற்கு பா.ஜனதா கட்சியினர் அ.தி.மு.க.வை நாடவில்லை.
ஆகவே 36 வார்டுகளிலும் அதிமுக நேரடியாக களம் காண இருப்பதாக தெரிவித்தார். 

தொடர்ந்து அ.தி.மு.க.வை விமர்சித்துப் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த நயினார் நாகேந்திரனருக்கு கண்டனம் தெரிவித்தார்.

Similar News