உள்ளூர் செய்திகள்
தியாகதுருகம் அருகே சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு
தியாகதுருகம் அருகே சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே எடச்சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் முத்தையன் (வயது 34).
இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரது உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் எடச்சித்தூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விருகாவூர் பகுதியில் வந்தபோது எதிரே கூத்தக்குடி பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற மினி சரக்கு வாகனம், இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மினி சரக்கு வாகன ஓட்டுனர் திருச்சி மாவட்டம் தேவகானம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஜெகதீஷ் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே எடச்சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் முத்தையன் (வயது 34).
இவர் நேற்று முன்தினம் தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரது உறவினர்களை பார்த்து விட்டு மீண்டும் எடச்சித்தூர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விருகாவூர் பகுதியில் வந்தபோது எதிரே கூத்தக்குடி பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற மினி சரக்கு வாகனம், இவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்தையன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மினி சரக்கு வாகன ஓட்டுனர் திருச்சி மாவட்டம் தேவகானம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஜெகதீஷ் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.