உள்ளூர் செய்திகள்
ஆட்சிமொழி பயிலரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தொடங்கி வைத்து பேசிய போது எடுத்த படம்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சி மொழி பயிலரங்கம்

Published On 2022-01-27 15:15 IST   |   Update On 2022-01-27 15:15:00 IST
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சி மொழி பயிலரங்கத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கண்ணி துவக்கி வைத்தார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் இன்று (27&ந்தேதி) மற்றும் நாளை 28&ந்தேதி  ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது.

இப்பயிலரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.01.2022) நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி  கலந்துகொண்டு பயிலரங்கத்தை துவக்கி வைத்து பேசியதாவது

தமிழ் மொழி தொன்மையான மூத்த மொழியாகும். தமிழக அரசின் ஆட்சி மொழியான  தமிழ் மொழியில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

அலுவலகப் பணிகளில் தமிழ்மொழி பயன்படுத்துவது குறித்து ஏற்படும் சந்தேகங்களை போக்கவும், அனைத்து கோப்புகளும் தமிழ் மொழியிலேயே கையாளவும் இதுபோன்ற பயிற்சிகள் மிகவும் உபயோகமாக இருக்கும். இப்பயிற்சியில் பங்கேற்று உள்ள அலுவலர்கள் இதனை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

அலுவலர்கள் தங்களது இல்லங்களிலும் தங்களது குழந்தைகளுக்கும் தமிழ் மொழியின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள நீங்கள் மற்ற அலுவலர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் (ஓய்வு)  துரை தம்புசாமி, தலைமையாசிரியர் மாயகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News