உள்ளூர் செய்திகள்
சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காடப் பாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 25). தொழிலாளி.
இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வெற்றிவேல் நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கட்டாய திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் வெற்றிவேலை எச்சரித்து, சிறுமியை மீட்டு இருவரையும் பிரித்து வைத்தனர்.
இந்நிலையில் வெற்றிவேல் சிறுமியை சந்தித்து நாம் சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி பெருந்துறை அருகே திருவேங்கடம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர்.
அப்போது, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் சிறுமி 4 மாதம் கர்ப்பம் அடைந்தார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வெற்றிவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு அவரை கைது செய்தனர்.
பின்னர் வெற்றிவேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.