உள்ளூர் செய்திகள்
ரூ. 7 லட்சம் மோசடி புகார்

ரூ.7 லட்சம் மோசடி 5 பேர் மீது வழக்கு

Published On 2022-01-26 16:27 IST   |   Update On 2022-01-26 16:27:00 IST
ரூ. 7 லட்சம் மோசடி புகார் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராஜபாளையம்

ராஜபாளையம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரிடம் சோழபுரத்தைச் சேர்ந்த செல்லக்கனி (44) என்பவர் நிலம் வாங்கித்தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்தார். 

இதற்கு உடந்தையாக பஞ்சவர்ணம், ரமேஷ், சாந்தி, மனோகரன் ஆகியோர் இருந்துள்ளனர். 

இது குறித்து விஜயலட்சுமி ராஜபாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர். 

அதன்படி ரூ.7 லட்சம் மோசடி செய்த செல்லக்கனி உள்பட 5 பேர் மீது கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Similar News