உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

விஷம் குடித்த பெயிண்டர் சாவு

Published On 2022-01-26 06:15 GMT   |   Update On 2022-01-26 06:15 GMT
விஷம் குடித்து பெயிண்டர் உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் மகன் சுப்ரமணி (42). பெயிண்டரான இவர், கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 23&ந் தேதி ஏற்பட்ட வயிற்று வலியால் மனமுடைந்த சுப்ரமணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்ரமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News