உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
பெரம்பலூரில் குடியரசு தினவிழாவையொட்டி கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடந்த 73&வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கலெக்டர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 19 காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவலர் பதக்கங்களை அணிவித்த மாவட்ட கலெக்டர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன் களப் பணியாளர்களுக்கு 169 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .
விழாவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி, கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடந்த 73&வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கலெக்டர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 19 காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவலர் பதக்கங்களை அணிவித்த மாவட்ட கலெக்டர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன் களப் பணியாளர்களுக்கு 169 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .
விழாவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி, கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.