உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு கிராமத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 15 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு எரிசாராயத்தையும், அதனை கடத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 29) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 15 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டு எரிசாராயத்தையும், அதனை கடத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 29) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.