உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் டிரைவர்-விவசாயி தற்கொலை செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியதைச் சேர்ந்தவர் முனியசாமி(வயது 50), விவசாயி. இவருக்கு மூளை நரம்பு பிரச்சினை இருந்தது. இதனால் அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதில் விரக்தி அடைந்த முனியசாமி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முனிய சாமி மகன் அஜித்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி(வயது 38) டாட்டா ஏசி வாகனம் வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த சில வாரங்களாக இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. மருத்துவர்களிடம் காண் பித்தும் குணமாகவில்லை.
சம்பவத்தன்று கூமாபட்டி கண்மாயில் குளிக்க சென்ற தங்கபாண்டி வாழ்க்கையில் விரக்தி அடைந்த விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விரைந்து வந்து தங்க பாண் டியை வத்திராயிருப்பு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தங்கபாண்டியனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.