உள்ளூர் செய்திகள்
ரெயில் நிலையங்களில் தீவிர சோதனை
ஜோலார்பேட்டை, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்:
குடியரசு தினவிழாவையொட்டி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிற்கும் ரெயில்களில் பயணிகளின் பெட்டிகளிலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பயணி களின் உடமை களையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர்.
மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கும் மற்றும் ரெயில்களில் பயணம் செய்ய ஏறும் பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்து பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
ரெயில் நிலையத்தில் நுழைவு வாயிலிலும், பிளாட்பாரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் காட்பாடி ஜோலார்பேட்டை வழித் தடத்தில் ஜோலார்பேட்டை காட்பாடி நோக்கி செல்லும் மார்க்கத்திலும் பெங்களூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்களில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கிறதா என மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனை நாளை வரை தொடரும் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தெரிவித்தார்.
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் அவர்களின் உடமைகளை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் ரெயில்வே இருப்பு பாதை போலீசாரும் சோதனை செய்த பின்னரே ரெயில் நிலையத்திற்குள் அனுமதித்தனர்.
தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பெட்டியில் உள்ளே சென்று பயணிகளிடம் சோதனை செய்தனர்.
மேலும், ரெயில்வே போலீசார் தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.