உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சங்கராபுரம் அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அமுல்ராஜ் (வயது 24). இவருக்கு திருணம் செய்து வைக்க பெரியவர்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக அமுல்ராஜிக்கு பெண் பார்த்து வந்துள்ளனர். இருப்பினும் பெண் கிடக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அமுல்ராஜ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அமுல்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.