உள்ளூர் செய்திகள்
தாக்குதல்

பெண் மீது தாக்குதல்

Published On 2022-01-24 09:55 GMT   |   Update On 2022-01-24 09:55 GMT
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிபட்டியை சேர்ந்தவர் கவிதா (24). இவருக்கும், மதுரை அவனியாபுரத்தை  சேர்ந்த ராமர்பாண்டி என்பவருக்கும் 2  வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். 

இந்த நிலையில் கவிதா திருமணத்தின்போது தனக்கு பெற்றோர் அணிந்த நகைகளை திருப்பி கேட்க கணவர் வீட்டுக்கு சென்றார். 

அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் ராமர்பாண்டி, உறவினர்கள் பாண்டிமீனாள், தனபாக்கியலட்சுமி, ஆதி, சத்யா ஆகிய 5 பேர் தன்னை தாக்கி நகைகளை பறித்ததாக  கவிதா   போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News