உள்ளூர் செய்திகள்
காரியாபட்டி அருகே இளம்பெண்கள் மாயம்
காரியாபட்டி அருகே 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள அல்லாலப்பேரியை சேர்ந்த 17 வயது இளம்பெண் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னக்காள். இவரது மகள் காயத்ரி (18). அங்குள்ள வேளாண் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.