உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-01-24 15:08 IST   |   Update On 2022-01-24 15:08:00 IST
அரக்கோணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த நாகவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (47). சென்னை தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். 

சம்பவத்தன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து பலியானார். 

தகவல் அறிந்து அங்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News