உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

Published On 2022-01-23 09:24 GMT   |   Update On 2022-01-23 09:24 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி கொரோனா தொற்றால் ஒருவர்கூட பாதிக்கப்படாத நிலையில், ஜனவரி 1-ந்தேதி 5 பேர் பாதிக்கப்பட்டனர். 10-ந்தேதி 38 பேர் எனவும், 15-ந்தேதி 120 பேர் எனவும், 20ஆம் தேதி 186 பேரும், நேற்று 231 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று மூன்றாவது அலை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதை உணர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முக கவசங்களை அணிந்து கொண்டும், சமூக இடைவெளி, பொதுமுடக்கம் ஆகியவற்றை கடைபிடித்து கொரோனா தொற்று பரவலை முழுவதும் ஒழிக்க சுகாதாரத்துறையினருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.
Tags:    

Similar News