உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவன் சாவில் சந்தேம்

மாணவன் சாவில் சந்தேம் இருப்பதாக தந்தை புகார்

Published On 2022-01-23 08:06 GMT   |   Update On 2022-01-23 08:06 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளி மாணவன் சாவில் சந்தேம் இருப்பதாக தந்தை புகார் கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் வசிப்பவர் ஆடிட்டர் விஜயவிநாயகம்.  இவருடைய மகன் சிவபிரசாத் (வயது 13). தனியார்   மெட்ரிகுலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று   சிவபிரசாத் ஆன்லைன் கிளாசில்  வீட்டில் படித்து கொண்டிருந்தார். விஜயவிநாயகத்தின் மனைவி வீட்டு  மாடியில் துணி காயப்போட்டுவிட்டு   வந்தபோது சிவபிரசாத்  தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவனை மீட்டு  தனியார் மருத்துவ மனைக்கு  கொண்டு சென்றனர். பின்னர்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். 

அங்கு பரிசோதித்த டாக்டர்கள்  சிவபிரசாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுதொடர்பாக  நகர் போலீசில் விஜய விநாயகம் புகார் செய்தார். அதில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

என்னுடைய மகன் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லை. போலீசுதான் எனக்கு உதவ வேண்டும். அவருடைய மரணத்துக்கு உண்மையான காரணத்தை விசாரணை நடத்தி  கண்டறிய வேண்டும் என புகாரில் கூறி உள்ளார்.

அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் இறந்து எப்படி? என்பது குறித்து   விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News