உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. பேசினார்.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-23 12:58 IST   |   Update On 2022-01-23 12:58:00 IST
வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வேதாரண்யத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கிரிதரன், சுப்பையன், நகரச் செயலாளர் நமச்சிவாயம், மாவட்ட பொருளாளர் சண்முகராஜ், மாவட்ட கவுன்சிலர் தீபன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

Similar News