உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-01-23 12:08 IST   |   Update On 2022-01-23 12:08:00 IST
நாகையில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் கொலை, கொள்ளை தொடர்பான குற்ற வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதனடிப்படையில் நாகை நகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய நாகையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், கருப்புசிவா, ரெட்டு பிரகாஷ், பச்சை சிவா, அப்பு என்கிற பார்த்திபன், சீனு ஆகிய 6 பேரும் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News