உள்ளூர் செய்திகள்
கொள்ளை

விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வீடுகளில் கொள்ளை

Published On 2022-01-22 10:28 GMT   |   Update On 2022-01-22 10:28 GMT
விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள கல்குறிச்சியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 41), கட்டிட தொழிலாளி. இவரது மனைவியும் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கணவன், மனைவி வேலைக்கு சென்றுவிட வீட்டிலிருந்த மகனும் கதவைப்பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் ராசாத்தி (38). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 1 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது.

இதுகுறித்து ராசாத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் தன்னுடன் பணிபுரியும் ஈஸ்வரி வீட்டுக்கு வந்திருந்தார். எனவே பணம் நகை திருடு போனது தொடர்பாக அவர் மீது சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News