உள்ளூர் செய்திகள்
கள்ளக்குறிச்சியில் மூடு பனியால் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சியில் மூடு பணியின் காரணமாக பொதுமக்கள் பலரும் இன்று காலை வெளியே வருவதை தவிர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனி பெய்து வந்தது. இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாக காலையில் மூடுபனி பெய்தது. இதனால் 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.
மூடு பணியின் காரணமாக பொதுமக்கள் பலரும் இன்று காலை வெளியே வருவதை தவிர்த்தனர். தொடர்ந்து சுமார் 8:30 மணி அளவில் சூரியன் உதிக்க தொடங்கியதும் மூடுபனி விலகியது.
இதனை தொடர்ந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வழக்கம் போல தங்களது பணிகளை செய்தனர்.