உள்ளூர் செய்திகள்
பாளை திம்மராஜபுரத்தில் வீட்டுக்கு சென்று ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி போட்ட மருத்துவக்குழுவினர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று 520 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-01-22 09:25 GMT   |   Update On 2022-01-22 09:25 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று 520 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
நெல்லை:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணி பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்திலும் தடுப்பூசி போடுவதற்கு வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வாரத்திற்கு 2 நாட்கள் நடைபெற்ற இந்த முகாம் தற்போது வாரந்தோறும் சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான மக்கள் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை சுமார் 90 சதவீதம் பேர் செலுத்திக்கொண்டனர். இதனால் 2&வது தவணை போடுபவர்கள் மட்டுமே வந்து தடுப்பூசி போட்டனர். மாவட்டம் முழுவதும் இன்று 520 இடங்களில் தடுப்பூசி  சிறப்பு முகாம் நடந்தது.

நெல்லை அரசு மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மாநகர பகுதியிலும் இன்று நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 22வது தவணை தடுப்பூசியை பெரும்பாலானோர் போட்டுக் கொண்டனர். வீடு வீடாகவும சென்று மருத்துவக்குழுவினர் தடுப்பூசி போட்டனர்.

மாநகரை பொறுத்தவரை மொத்தம் உள்ள மக்கள் தொகை 5,13,120 ஆகும்.  இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4,00,966 பேர். இதில் 3,26, 836 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 2,05,787 பேர் 2-ம் டோசும் செலுத்திக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News