உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பால்வேன் மோதி மாற்றுத்திறனாளி காயம்

Published On 2022-01-22 09:23 GMT   |   Update On 2022-01-22 09:23 GMT
பால்வேன் மோதியதில் மாற்றுத்திறனாளி காயம் அடைந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 57). மாற்றுத்திறனாளியான இவர், இன்று காலை பால் வாங்குவதற்காக வந்து கொண்டிருந்தார். வேப்பூர் ஒன்றிய அலுவலகம் அருகே வந்த போது, தனியார் பால் வேன் இவர் மீது மோதியது.

இதில் சுப்பிரமணயின் கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் கதறினார். இதனைப் பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News