உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 734 பேருக்கு கொரோனா

Published On 2022-01-22 07:23 GMT   |   Update On 2022-01-22 07:23 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 49 பேரும் தனியார் மருத்துவமனையில் 68 பேரும் உள்ளனர். வீட்டு தனிமையில் 2,005 பேர் உள்ளனர்.
ராணிப்பேட்டை:

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 734 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,767-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 48,863 பேர் குணமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் 49 பேரும் தனியார் மருத்துவமனையில் 68 பேரும் உள்ளனர். வீட்டு தனிமையில் 2,005 பேர் உள்ளனர்.

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News