உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ரெயில் மோதி வியாபாரி பலி

Published On 2022-01-22 06:23 GMT   |   Update On 2022-01-22 06:23 GMT
ரெயில் மோதி வியாபாரி பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருவெப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் நூடுல்ஸ் கடை நடத்தி வந்தவர் ரஞ்சித்குமார்(வயது 28). இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேலேய உடல் சிதறி பலியானார். 

பலியான ரஞ்சித்குமாருக்கு குடிபழக்கம் உள்ளது. ஆகவே குடிபோதையில் ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கோ. கர்ணம் சம்பவ இடம் விரைந்து சென்றார். 

பின்னர் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த ரஞ்சித் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ரெயில்மோதி வியாபாரி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News