உள்ளூர் செய்திகள்
சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி.

கதித்தமலை கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2022-01-21 16:35 IST   |   Update On 2022-01-21 16:35:00 IST
கதித்தமலை கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஊத்துக்குளி:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் புகழ்பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  

இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர் திருவிழா தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர்.

Similar News