உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மோட்டார் சைக்கிள் விபத்து: கணவன்- மனைவி உள்பட 3 பேர் படுகாயம்

Published On 2022-01-21 04:57 GMT   |   Update On 2022-01-21 04:57 GMT
புதுவை பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி:

வில்லியனூர்   அருகே கோர்க்காடு புதுநகரை சேர்ந்தவர் கொடிபாலன் (வயது 43). லாரிடிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவர் மோட்டார்   சைக்கிளில் தனது மனைவி சங்கீதா (வயது 33) மற்றும் மைத்துனர் மகன் சுந்தர மலரவன் (11) ஆகியோருடன் குமாரமங்கலம்-பாகூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். 

அரங்கனூர் மகாத்மா காந்தி மருத்துவமனை அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள்   எதிர்பாராத விதமாக கொடிபாலன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கொடிபாலன், அவரது மனைவி சங்கீதா மற்றும் சுந்தர மலவரன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே   அவ்வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு   கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர்.

இதேபோல் தவளக்குப்பம்  அருகே டி.என். பாளையம் புது நகரை சேர்ந்தவர் அமர்நாத் (25). இவர்   அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். 

இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அபிஷேகப்பாக்கம்-டி.என். பாளையம் மெயின் ரோட்டில் சிவபுரி நகர் அருகே வந்த போதுஅங்கு நிறுத்தி இருந்த மினி வேன் மீது அமர்நாத் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அமர்நாத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார். 

உடனே அங்கிருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

இந்த 2 விபத்துகள் குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News