உள்ளூர் செய்திகள்
கோரிக்கை வலியுறுத்தி முற்றுகை போராட்டம்.

விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம்

Published On 2022-01-20 09:44 GMT   |   Update On 2022-01-20 09:44 GMT
திருமருகலில் ஒன்றிய அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார். 

தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார். 
இதில் வடகரையிலுள்ள 9 குளங்களை ஒரு தரப்பு மக்கள் மட்டும் பயன்படுத்துவதை கண்டித்தும், ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முறையான சாலை வசதி வழங்க வேண்டும். 

சரியான பயனாளிகளை தேர்வு செய்து தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், ஆடு, மாடுகள் கொட்டகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் தொகுதி துணை செயலாளர் சுரேஷ், தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன், ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் வைரமுத்து, ஒன்றிய அமைப்பாளர் ஜெயராமன், ஒன்றிய துணை அமைப்பாளர் கண்ணன், வணிகரணி தொகுதி அமைப்பாளர் இளமாறன், துணை அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் திட்டச்சேரி ரவி, திருக்கண்ணபுரம் இரணியன், 
வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் முருகானந்தம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News