உள்ளூர் செய்திகள்
பயனாளிகளுக்கு நல உதவி வழங்கல்.

தேவைக்கேற்ப அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும்

Published On 2022-01-20 08:51 GMT   |   Update On 2022-01-20 08:51 GMT
டெல்டா மாவட்டங்களில் தேவைக்கேற்ப அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 
சமூக நலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம், வேளாண் மற்றும் 
தோட்டக்கலை துறை சார்பாக உழவர்களுக்கு மானியம் 
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் சுமார் 3 கோடியே 81 லட்சம் 
ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில்மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், 
நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், எம்.எல்.ஏக்கள் 
ஆளூர் முகமது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் பயனாளிகள் 
பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்:-

டெல்டா மாவட்டங்களில் விரைந்து நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கேற்ப திறக்கப்படும். கடந்த முறை சாகுபடி செய்த குருவை நெல்மணிகள், முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட்டது. 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டு, நெல் 
மூட்டைகள் வீணாகி விடாமல் கொள்முதல் செய்யப்படும். குறுவைக்கு பின்பற்ற நடைமுறையில் இருந்த முறை நெல் கொள்முதல் ஆன்லைனில் சிரமம் இல்லாமல் நடைபெறும். 


இ-பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் தவிர்க்கப்படும். இ-பதிவில் 
ஏற்படும் சிக்கல்களை விவசாயிகள் புகாராக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Tags:    

Similar News