உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்குகிறது

Published On 2022-01-20 05:42 GMT   |   Update On 2022-01-20 05:42 GMT
புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் 19-ந் தேதி 6 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதிதாக 2 ஆயிரத்து 783 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 2 ஆயிரத்து 230, காரைக்காலில் 462, ஏனாமில்  68,  மாகியில் 23 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் 81, காரைக்காலில் 35, ஏனாமில் 12, மாகியில் 15 பேர் என 144 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் ஆயிரத்து 20, காரைக்காலில் 25, ஏனாமில் 2, மாகியில் 26  பேர் என ஆயிரத்து 73 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். 

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 342 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 392 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

புதுவையில் 10 ஆயிரத்து 745, காரைக்காலில் ஆயிரத்து 792, ஏனாமில் 225, மாகியில் 147 பேர் என 12 ஆயிரத்து 909 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 

புதுவை மாநிலத்தில் இப்போது 13 ஆயிரத்து 53 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். புதுவை சுதந்திர பொன்விழா நகரை சேர்ந்த 95 வயது மூதாட்டி கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது. 

புதுவையில்  2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 12 ஆயிரத்து 236 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

இத்தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News