உள்ளூர் செய்திகள்
மிரட்டல்

திருக்கோவிலூர் அருகே நிலத்தகராறு: வாலிபருக்கு கொலை மிரட்டல்

Published On 2022-01-19 11:27 GMT   |   Update On 2022-01-19 11:27 GMT
திருக்கோவிலூர் அருகே நிலத்தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விக்ரமன் (வயது 46).

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த திருக்குமார் பாலச்சந்திரன் பேபி ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

சம்பவத்தன்று இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த திருக்குமார், பாலச்சந்திரன் மற்றும் பேபி ஆகிய 3 பேரும் சேர்ந்து விக்ரமனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விக்ரமன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தகராறின் போது காணாமல் போன விக்ரமனின் 5 பவுன் தங்கச் சங்கிலியையும் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News