உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் டிரைவர் மற்றும் வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர்
சாத்தூர் தென்றல் நகரைச்சேர்ந்தவர் சரவணன் (வயது38). டிரைவரான இவர் வேலை விஷயமாக வடமாநிலங்களுக்கு அடிக்கடி சென்றுவிடுவார். இதன் காரணமாக மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பார்.
கடந்த சில மாதங்களாக சரவணன் அடிக்கடி மது குடித்து வந்ததால் வீட்டில் பிரசினை ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று சரவணன் மது குடித்து வந்தததால் மனைவி கண்டித்துள்ளார்.
இதில் விரக்தி அடைந்த சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (22). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். மேலும் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவர்கள் தற்போதைக்கு முடியாது என மறுத்து விட்டனர். இதில் விரக்தி அடைந்த முத்துராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.