உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில் திருக்குறள் முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது.
அரக்கோணம்:
திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ந்தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி அரக்கோணம் திருக்குறள் தமிழ்ப் பேரவையின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான 1330 திருக்குறட்பாக்களை இணைய வழி மூலமாக ஒப்புவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவ மாணவியர் 133 பேர் கலந்து கொண்டு ஒப்புவித்தனர். வளர்புரம் மேல்நிலைப்பள்ளி சார்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரக்கோணம் ஒன்றிய கவுன்சிலர் வளர்புரம் நாராயணசாமி மற்றும் வளர்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரிய கழகத்தின் தலைவர் மதி ஆகியோர் திருக்குறள் புத்தங்களை பரிசாக வழங்கினர்.