உள்ளூர் செய்திகள்
மரணம்

கள்ளக்குறிச்சியில் 11ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்- தாய் போலீசில் புகார்

Published On 2022-01-18 16:09 IST   |   Update On 2022-01-18 16:09:00 IST
கள்ளக்குறிச்சியில் 11-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மேற்கு உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மவுலி தேவி (வயது 38). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
 
இவருக்கும் கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் அன்பரசன் என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மவுலி தேவியின் 2 பெண் குழந்தைகளும் தனது பாட்டி புவனேஸ்வரி வீட்டில் தங்கி படித்துவந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு மூத்த மகளான ஹரிணி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மேலும் ஹரிணி கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம்  வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மவுலி தேவியிடம் கழிவறையில் ஹரிணி வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக உறவினர் ஒருவர் போன் செய்து கூறியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மவுலி தேவி தனது மகள் ஹரிணி சாவில் சந்தேகம் இருப்பதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹரிணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணயில் மாணவி கழிவறைக்கு சென்ற போது வலிப்பு வந்து வழுக்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியின் சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News