உள்ளூர் செய்திகள்
இலங்கைக்கு 170 கிலோ கஞ்சா கடத்த முயன்ற 9 பேர் கைது
இலங்கைக்கு ரூ.55 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சா பொட்டலம் கடத்த முயன்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக தனிப்படை போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேதாரண்யம் புதுப்பள்ளி பாலத்தின் அருகில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 காரில் இருந்து இறங்கிய 9 பேர் ரகசியமாக திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் அதற்குள் போலீசார் 9 பேரையும் சற்றி வளைத்து பிடித்தனர்.
2 காரையும் சோதனை செய்தபோது ரூ.50 லட்சம் மதிப்புள்ள
170 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நடத்திய விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை அவர்கள் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாகவும், அவற்றை இலங்கைக்கு
கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்து
170 கிலோ கஞ்சா மற்றும் 2 காரையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிவில் இந்த கடத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?
அந்த 9 பேர் யார்? என்பது பற்றிய தகவல் தெரிய வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.