உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தி.மு.க., அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு தீவிரம்

Published On 2022-01-18 09:51 GMT   |   Update On 2022-01-18 09:51 GMT
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கு தி.மு.க., அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர், பள்ளி கொண்டா, திருவலம், பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி மேயர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க- அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணல் நடந்தது.

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, கதிர் ஆனந்த் எம்.பி. கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேர்காணல் நடத்தினர். 

இதில் வேலூர் மாநகராட்சி 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

இதேபோல காட்பாடியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் நேர்காணல் நடந்தது. மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
Tags:    

Similar News