உள்ளூர் செய்திகள்
வாலாஜாவில் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்குவதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு.

வழங்கப்படாத பொங்கல் தொகுப்பு குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2022-01-18 09:51 GMT   |   Update On 2022-01-18 09:51 GMT
வாலாஜாவில் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பொங்கல் தொகுப்பு குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 4-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது. 

பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று அரசு விடுமுறை நாளிலும் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதனடிப்படையில் நேற்று வாலாஜா நகராட்சியில் இயங்கும் பெல்லியப்பா நகர் மற்றும் அணைக்கட்டு சாலையில் உள்ள ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்த ஆய்வில் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா என பொருட்களை பிரித்து பார்த்து அவற்றின் அளவையும் சரி பார்த்தார். எவ்வளவு குடும்ப அட்டைதாரர் களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் கேட்டறிந்தார்.  பொருட்களை பெற்றுக்கொள்ளாத பொதுமக்களுக்கு முடிந்தவரையில் அனைத்து பொருட்களும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலரை தெரிவித்தார். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 977 குடும்ப அட்டைகளில் இதுவரை 95 சதவீதம் அதாவது 3 லட்சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங் கப்பட்டு உள்ளது. பெரும் பான்மையானவர்களுக்கு பொருட்கள் வழங்கப் பட்டுள்ளது. நாளை (இன்று) தைப்பூசம் அரசு விடுமுறை, எஞ்சியுள்ளவர்களுக்கு வருகிற 19-ந் தேதி வழங்கிட வேண்டும் என மாவட்ட வழங்கல் அலுவலருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். 

மேலும் அனைத்து தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட விவரங்களை அன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  

இந்த ஆய்வின்போது தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் குமார், மண்டல துணை தாசில்தார் விஜயசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News