உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இன்று 315 பேருக்கு கொரோனா

Published On 2022-01-18 09:48 GMT   |   Update On 2022-01-18 09:48 GMT
வேலூர் மாவட்டத்தில் இன்று 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,964 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 249 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News