உள்ளூர் செய்திகள் (District)
அங்காள பரமேஸ்வரி அம்மன், பேட்டை பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பரமத்திவேலூர் அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு

Published On 2022-01-18 09:28 GMT   |   Update On 2022-01-18 09:28 GMT
பரமத்திவேலூர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு விழா நடைபெற்றது.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். 

 அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் பேட்டை மாரியம்மன், கரூர் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மன், கொந்தளம் மாரியம்மன், ஆனங்கூர் பகவதி அம்மன், மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இன்று(செவ்வாய்க்கிழமை) வரை கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் பக்தர்கள் இன்றி அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Tags:    

Similar News