உள்ளூர் செய்திகள்
கைது

9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

Published On 2022-01-17 11:51 GMT   |   Update On 2022-01-17 11:51 GMT
கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்து படித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பிரிதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் மணிகண்டன்(வயது 27) என்பவர் திடீரென வீட்டின் உள்ளே புகுந்த மாணவியின் வாயில் துணியை அமுக்கி வலுக்கட்டாயமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பெற்றோருக்கு பயந்து நடந்த சம்பவத்தை மாணவி அவரது பெற்றோரிடம் கூறவில்லை.

பின்னர் மறுநாளும் வீட்டில் தனியாக இருந்த மாணவியை மணிகண்டன் அருகில் உள்ள மாட்டுகொட்டகைக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதுபற்றி மாணவி அவரது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதையடுத்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News