உள்ளூர் செய்திகள்
கொலை மிரட்டல்

வனகாவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

Published On 2022-01-17 15:19 IST   |   Update On 2022-01-17 15:19:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனகாவலருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவேசி தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வருபவர் முத்தரசன். இவர் நேற்று முழு ஊரடங்கின்போது வனப்பகுதியில் பணியில் ஈடுபட்டார்.

அப்போது கான்சாபுரத்தை சேர்ந்த முருகன், அவரது நண்பர்கள் அங்குள்ள முத்துக்கள் கேணியில் குளித்துக் கொண்டிருந்தனர்.இதை  முத்தரசன், ஊரடங்கு காலத்தில் குளிக்ககூடாது என அறிவுறுத்தினார். ஆத்திரமடைந்த முருகன், வன காப்பாளர் முத்தரசனை அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தார்.  

இதுகுறித்து முத்தரசன் கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.

Similar News