உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.
வாலாஜா:-
ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா வாலாஜா பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஏழுமலை, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என்.முனிசாமி, முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா நகர செயலாளர் மோகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வாலாஜா நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ், நகர அவை தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.